துணை ஜனாதிபதி தேர்தல்: ஷெகாவத், ஷிண்டே கடும் மோதல்
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத்துக்கும்காங்கிரஸ் வேட்பாளரான சுசில்குமார் ஷிண்டேவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த இருவரையும் சேர்த்து மொத்தம் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் நான்கு மனுக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு மனுக்கள்ஷெகாவத்துக்கு ஆதரவாகத் தாக்கலாகின.
இந்த ஆறு மனுக்கள் தவிர மற்ற 21 மனுக்களுமே இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இவற்றில் 19 மனுக்கள்சரியாக நிரப்பப்படாத காரணத்தாலும், ஒரு மனு அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட காரணத்தாலும் தள்ளுபடிசெய்யப்பட்டன. மற்றொருவர் தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஷெகாவத்தும் ஷிண்டேயும் மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கின்றனர். அவர்கள்இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
வரும் ஆகஸ்டு 12ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை துணை ஜனாதிபதி தேர்தல்நடைபெறவுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அன்று இரவே முடிவும் அறிவிக்கப்படும்என்றும் லோக் சபா செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான மல்ஹோத்ரா தெரிவித்தார்.