ஜெயலலிதாவிடம் வருத்தம் தெரிவித்தார் அத்வானி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்அனுப்பாததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் துணைப் பிரதமர் அத்வானி.

டாக்டர் அப்துல் கலாமின் பதவியேற்பு விழாவுக்குத் தன்னை மத்திய அரசு அழைக்கவில்லை என்று கடந்தவெள்ளிக்கிழமை பத்திரிக்கை நிருபர்களிடம் காட்டமாகக் கூறினார் ஜெயலலிதா.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. அதையும் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிஅறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சருமானஅத்வானி இனி நடைபெறும் அரசு விழாக்களில் அழைப்பு அனுப்புவதில் முக்கியக் கவனம் செலுத்தப்படும்என்றும் அழைப்பிதழ் அனுப்பாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

எனக்கு அழைப்பு விடுக்காமல் போனதற்கு நீங்கள் காரணமல்ல. நான் உங்களைக் குற்றம் சொல்லவும் இல்லைஎன்று அப்போது அத்வானியிடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டதற்காக அத்வானிக்கு நன்றியும் தெரிவித்தார் ஜெயலலிதா.

இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக இது தொடர்பாக ஏற்பட்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+