வைகோ கைதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: மதிமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று மதிமுகவின்அரசியல் ஆலோசனைக் குழு நேற்று கூடியது.

வைகோவின் கைதைக் கண்டித்து சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் முன் வரும் 31ம் தேதி மதிமுகமகளிர் அணியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

மேலும் வரும் ஆகஸ்டு 12ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் முன் மதிமுகவினர்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர ஆகஸ்டு 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங்களைநடத்தவும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை சைக்கிள் பேரணிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வைகோ கைது செய்யப்பட்டது நியாயம் தானா என்ற கேள்வியுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவீட்டிலும் ஆகஸ்டு 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கவும் மதிமுக முடிவுசெய்துள்ளது.

இதற்கிடையே வைகோ கைதைக் கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக இளைஞரணி முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+