தீவிரவாதிகள் தாக்குதல்: 2 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி
ஸ்ரீநகர்:
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென்று கிரனைட் குண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தியதில் 2 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 19ம் தேதி முதல் அமர்நாத் குகை நோக்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்றுகொண்டிருக்கின்றனர்.
மேலும் கடந்த 22ம் தேதி முதல் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் குகையை அடைந்துஅங்குள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டு தான் உள்ளனர். இவர்களுக்குப்பாதுகாப்பாக ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வழிநெடுகிலும்நிறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தனை பாதுகாப்புகளையும் மீறி நேற்று மாலை அனந்தநாக் பஸ் நிலையம் அருகே யாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்களின் காரை நோக்கி தீவிரவாதிகள் திடீரென்று கிரனைட் குண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் கார் தகர்க்கப்பட்டு அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பக்தர்கள்படுகாயமடைந்தனர்.
அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு நடைபெறும் அமர்நாத் யாத்திரையின் போது தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications