ஜெ. தொகுதியில் திமுக கஞ்சித் தொட்டி, அதிமுக முட்டை பிரியாணி: வாங்க மறுத்த நெசவாளர்கள்
ஆண்டிப்பட்டி:
பசிக் கொடுமையால் வாடும் ஆண்டிப்பட்டி தொகுதி நெசவாளர்களுக்காக திமுக சார்பில் கஞ்சித் தொட்டிதிறக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக அதிமுகவினர் முட்டை பிரியாணி வழங்கினர்.
ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள மறுத்த பல பெண் நெசவாளர்கள் தங்களுக்கு மீண்டும் நெசவுவேலையையும் அதற்குரிய கூலியையும் கொடுத்தால் போதும் என்று கூறி விட்டனர்.
தமிழகம் முழுவதும் நெசவு வேலையின்றி பசியின் கொடுமையால் வாடும் நெசவாளர்களுக்காக திமுகவினர்கஞ்சித் தொட்டி திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஆண்டிப்பட்டியில் உள்ள ஜக்கம்பட்டி பகவதியம்மன் கோவில் அருகே கஞ்சித் தொட்டி திறக்கவேண்டும் என்று அத்தொகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளரும் இடைத் தேர்தலில் முதல்வர்ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான வைகை சேகர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அதற்குள் நெசவாளர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கவும் தேங்கியுள்ள கைத்தறிச் சேலைகளைக்கொள்முதல் செய்யவும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த இடத்தில் இலவச அரிசி அளிக்கப் போவதாகக் கூறி வைகை சேகருக்கு அனுமதி அளிக்கபோலீசார் மறுத்து விட்டனர். இதனால் அந்த இடத்தை மாற்றி ஜக்கம்பட்டி பிள்ளையார் கோவில் அருகேதிமுகவினர் நேற்று கஞ்சித் தொட்டியைத் திறந்தனர்.
உடனே இதற்குப் போட்டியாக அதிமுகவினர் முட்டை பிரியாணி தயாரித்து நெசவாளர்களுக்கு வழங்கினர்.ராஜ்யசபா எம்.பியான தங்கத்தமிழ்ச் செல்வன் தலைமையில் முட்டை பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு கஞ்சியையும் முட்டை பிரியாணியையும் வழங்கியதைப்பார்த்த சில பெண் நெசவாளர்கள், எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். நெசவு வேலையையும் அதற்கானகூலியையும் கொடுக்க மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி அந்தப் பக்கமே போக மறுத்து விட்டனர்.
இதற்கிடையே நெசவாளர்களுக்கு கூப்பன் முறையில் இலவச அரிசி வழங்கப்பட்டது. அதிலும் தற்போதுகூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு அரிசி கிடையாது என்று அதிகாரிகள் கூறியதைத்தொடர்ந்து பல நெசவாளர்கள் வெறும் கையுடன் சோகத்துடன் வீடு திரும்பினர்.
-
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications