வைகோ கைது ஆவணங்கள் "பொடா" தனி நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள்அனைத்தும் பொடாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
பொடா சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே சென்னை-பூந்தமல்லியில் தனி நீதிமன்றம் ஒன்றைதமிழக அரசு சமீபத்தில் அமைத்தது.
இந்தத் தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதிபதி எல். ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தத் தனி நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினர் மீதுவழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
இந்தக் கைதுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மதுரை மாவட்டம் திருமங்கலம் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்திலேயே இருந்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர்கள் ஒன்பது பேரும் கைதானது வரைஅனைத்தையும் இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டான நீதிபதி வெங்கடாசலபதி தான் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி தனி நீதிமன்றம் முழு அளவில் தயாராகி விட்டதைத் தொடர்ந்து அனைத்துஆவணங்களையும் திருமங்கலம் நீதிமன்றத்திலிருந்து தனி நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி வெங்கடாசலபதி நேற்றுஉத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ மற்றும் மதிமுகவினருக்கு எதிராகப் பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொடா தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இனிமேல் இந்தத் தனி நீதிமன்றம் தான் பொடா வழக்குகள் குறித்து விசாரிக்கும்.












Click it and Unblock the Notifications