வைகோ கைது ஆவணங்கள் "பொடா" தனி நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள்அனைத்தும் பொடாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
பொடா சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே சென்னை-பூந்தமல்லியில் தனி நீதிமன்றம் ஒன்றைதமிழக அரசு சமீபத்தில் அமைத்தது.
இந்தத் தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதிபதி எல். ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தத் தனி நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினர் மீதுவழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
இந்தக் கைதுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மதுரை மாவட்டம் திருமங்கலம் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்திலேயே இருந்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர்கள் ஒன்பது பேரும் கைதானது வரைஅனைத்தையும் இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டான நீதிபதி வெங்கடாசலபதி தான் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி தனி நீதிமன்றம் முழு அளவில் தயாராகி விட்டதைத் தொடர்ந்து அனைத்துஆவணங்களையும் திருமங்கலம் நீதிமன்றத்திலிருந்து தனி நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி வெங்கடாசலபதி நேற்றுஉத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ மற்றும் மதிமுகவினருக்கு எதிராகப் பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொடா தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இனிமேல் இந்தத் தனி நீதிமன்றம் தான் பொடா வழக்குகள் குறித்து விசாரிக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications