பட்டினியைத் தடுக்க கலெக்டர்களுக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசிடம் ரூ. 423 கோடியை முதல்வர்ஜெயலலிதா கோரியுள்ளார். மேலும் தமிழகத்தில் பட்டினியால் யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக வறட்சியை சமாளிக்க மத்திய அரசிடம் தமிழகம் ரூ. 300 கோடி கோரியது. ஆனால், வறட்சியின் கொடூரம் மிக அதிகமாகஇருப்பதால் கூடுதலாக ரூ. 123யைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னை தவிர்த்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொருமாவட்ட ஆட்சியரும் கொடுத்த தகவல்கள், வறட்சி குறித்த விவரங்களின் அடிப்படையில் கூடுதலாக நிதி கோர தமிழகம் முடிவுசெய்துள்ளது.

பட்டினி சாவுகள்:

தமிழகத்தில் பட்டினியால் சாவுகள் நடக்க ஆரம்பித்துள்ளதையடுத்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.(பட்டினி சாவுகளை முதலில் வெளியிட்டது தட்ஸ்தமிழ்.காம் தான்)

கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய அவர், மக்களுக்கு குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தாக வேண்டும். ஒவ்வொருமாவட்டத்தின் நீர் இருப்பு குறித்த விவரங்களை கலெக்டர்கள் அவ்வப்போது துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக நம்மிடம் போதிய உணவு தானியம் கையிருப்பு உள்ளது. எனவே, மழையில்லாமல் போனாலும் பசியால் எந்த ஒருகுடிமகனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. இதை கலெக்டர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+