புதுவை ஆளுநராக பதவியேற்றார் மல்கானி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது துணை நிலை ஆளுநராக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரானகே.ஆர். மல்கானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மல்கானிக்கு பாண்டிச்சேரி தலைமை நீதிபதியான அக்பர் அலி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநராக மல்கானி நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி அனுப்பிய உத்தரவைதலைமைச் செயலாளரான டி.டி. ஜோசப் வாசித்தார்.
பாண்டிச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்தப் பதவியேற்பு விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களான இல. கணேசன், லலிதா குமாரமங்கலம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மல்கானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications