வைகோ கைது: சென்னை to
கலிங்கப்பட்டி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவருடைய சொந்த ஊரானகலிங்கப்பட்டியிலிருந்து சென்னைக்கு அக்கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் சைக்கிள் பேரணி ஒன்றை இன்றுதொடங்கினர்.
இன்று காலை கலிங்கப்பட்டியில் இந்த சைக்கிள் பேரணி தொடங்கியது.
வைகோவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்து இந்தப் பேரணியில் செல்பவர்கள்கோஷங்கள் எழுப்புவார்கள்.
இந்தப் பேரணி வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 6ம் தேதி) சென்னையை வந்தடையும் என்று தெரிகிறது.
பேரணி செல்லும் வழி நெடுகிலும் உள்ள வீடுகளில் வைகோ கைதைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்களை மதிமுகஇளைஞரணியினர் அளித்து வருகின்றனர்.
சென்னையில் மகளிரணியினர் உண்ணாவிரதம்:
இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக மகளிரணியினர் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக மகளிரணி உறுப்பினர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வைகோவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக பாசிஸ அரசைக் கண்டித்து நாங்கள் அறவழியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்என்று மதிமுக மகளிரணியின் தலைவர் விஜயா கூறினார்.