For Daily Alerts
Just In
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து 2 மாணவர்கள் தற்கொலை
விருதுநகர்:
விருதுநகரில் 2 பள்ளி மாணவர்கள் இன்று ஓடிக் கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
சுதாகர் மற்றும் நாகராஜன் என்ற இரு பேர் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். இருவருக்கும்வயது 18.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் பள்ளிக்கு மட்டுமில்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வதுவழக்கம்.
இந்நிலையில் இன்று காலை சுதாகரும் நாகராஜனும் விருதுநகர் ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
அப்போது அங்கு வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயிலின் முன்பாக அவர்கள் இருவரும் கண்ணிமைக்கும்நேரத்தில் திடீரெனப் பாய்ந்தனர்.
இதில் இந்த இரு மாணவர்களுமே உடல் சிதறி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 31, 2002, 5:30 [IST]