நாளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்றக் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து நாளை அவர் வேலூர் சிறையிலிருந்து சென்னையில் உள்ள பொடா தனி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்.

கடந்த ஜூன் 29ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகோ, ஜூலை 11ம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் வைகோவை 28 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வெங்கடாஜலபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே பொடா சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை-பூந்தமல்லியில் தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. நீதிபதி எல். ராஜேந்திரன் பொடா தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் வைகோவின் நீதிமன்றக் காவல் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.

இதையடுத்து நாளை வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் வைகோ, பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

வைகோவின் காவலை நீட்டிக்கச் சொல்லி க்யூ பிராஞ்ச் போலீசார் பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள்.வைகோ வீட்டில் சோதனை நடத்த "க்யூ" பிராஞ்ச் போலீசார் மீண்டும் மனு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+