For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ வீட்டில் சோதனை நடத்த "க்யூ" பிராஞ்ச் போலீசார் மீண்டும் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரின் வீடுகளில் சோதனை நடத்த அனுமதி கோரி பொடா தனி நீதிமன்றத்தில் "க்யூ" பிராஞ்ச் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

க்யூ பிராஞ்ச் போலீசாரின் இந்தக் கோரிக்கையை மதுரை திருமங்கலம் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வைகோ வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

இதையடுத்து இப்போது பொடா நீதிமன்றத்தில் இந்த மனுவை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பியான மகேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பான அனைத்து வழக்கறிஞர்களையும் வைத்துக் கொண்டு தான் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று வைகோவின் வழக்கறிஞரும் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதன் படி இது தொடர்பாக இன்று விசாரணை நடக்கிறது. இன்றே தீர்ப்பையும் வழங்கவுள்ளார் நீதிபதி எல். ராஜேந்திரன்.நாளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார் வைகோ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X