சென்னை கோவில் குளங்களை தூர் வார ரூ.20 லட்சம் மாநகராட்சி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் உள்ள ஐந்து முக்கியக் கோவில் குளங்களை ரூ.20 லட்சம் செலவில் தூர் வார மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவலிக்கேணி பார்த்தசாரதிகோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், கோயம்பேடு கருங்காளீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்துகோவில்களின் குளங்களையும் சுத்தப்படுத்தி, புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூ.20 லட்சம் தொகையை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
விரைவில் துவங்கவிருக்கும் இதற்கான பணிகள் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் முடிவடையும் என்றும்மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை நீர் தேக்கத்தை மனதில் கொண்டே இந்தத் திட்டத்தை மாநகராட்சி அமல் செய்யவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications