தமிழகத்தில் 34 பெட்ரோல் பங்குகள் உரிமம் ரத்து
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 34 பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் மற்றும்மண்ணெண்ணெய் ஏஜென்சிகளின் உரிமங்கள் அனைத்தும் ஒரு சில நாட்களில் ரத்து செய்யப்பட இருப்பதாக பாரத் பெட்ரோலியம்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது புகுந்து விளையாடி நூற்றுக்கணக்கானபா.ம.கவினருக்கு பங்குகளை ஒதுக்கினார். இதில் 34 பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகள் தான் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. உரிமம்பெற்ற மற்றவர்கள் இன்னும் அவற்றை நிறுவவில்லை.
மேலும் பல மாநிலங்களில் உள்ள பிற கட்சியினருக்கும் பா.ம.கவினர் பெட்ரோல் பங்குகள் வாங்க உதவியுள்ளனர். இதில் லட்சக்கணக்கில்ஊழல் நடந்துள்ளது.
இந் நிலையில் பாரத் பெட்ரோலியத்தின் தலைவர் பெகுரியா சென்னையின் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
நேற்று நள்ளிரவே மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு மிகத் தெளிவான உத்தரவு வந்துவிட்டது. உடனடியாக இந்த உரிமங்களை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் சில நாட்களில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுவிடும்.
அவ்வாறு ரத்து செய்தபின் அந்த பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகளை பாரத் பெட்ரோலியம் தன் வசம் எடுத்துக் கொள்ளும். பின்னர்முறையான டெண்டர்கள் மூலம் பொது மக்களுக்கு இவை விற்கப்படும்.
தமிழகத்தில் உரிமம் பெற்று ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்ட 34 பங்க், கேஸ் ஏஜென்சிகளை பாரத் பெட்ரோலியம் தனது வசம் எடுக்கும்












Click it and Unblock the Notifications