மேல்மருவத்தூர் கோவில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
மேல்மருவத்தூர்:
சென்னை அருகே உள்ள மேல் மருவத்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி ஒரு பெண்உயிரிழந்தார்.
மேல்மருவத்தூர் கோவிலில் ஆடி மாதம் ஆகையால் நேற்று (சனிக்கிழமை) பெரும் கூட்டம் இருந்தது.
மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அம்மனைத் தரிசிப்பதற்காகவந்திருந்தனர்.
பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் கோவிலில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில்சிக்கி ஒரு பெண் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராகினி (45) என்ற அந்தப் பெண் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேல்மருவத்தூர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications