மேலும் பல கோவில்களில் அன்னதானத் திட்டம்: தமிழக அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:
தமிழகத்தில் 63 கோவில்களில் நடந்து வரும் அன்னதானத் திட்டம் மேலும் பல கோவில்களுக்கும்விரிவுபடுத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி கூறினார்.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழகத்தில் உள்ள 63 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பா.ஜ.கவும் வரவேற்றுள்ள இந்த அன்னதானத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நன்கொடைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் ராமசாமி பேசுகையில்,
ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான கோவில் அன்னதானத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து இந்தத் திட்டத்தை மேலும் சில கோவில்களுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications