For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின விழா ஒத்திகை: ஜெ. போல வந்து கொடியேற்றிய பெண் போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது முதல்வர் ஜெயலலிதா போல ஒரு பெண்போலீஸ் அதிகாரி "நடித்து" தலைமைச் செயலகத்தில் கொடியேற்றினார்.

நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா கொடியேற்றவுள்ளார். அதற்கானஒத்திகை நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது.

இன்று அடுத்த கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகையின் போது ஜெயலலிதா எப்படி காரில் வந்துஇறங்கி, அணிவகுப்புகளைப் பார்வையிட்டு கொடியேற்றுவார் என்பதை அவருடைய இடத்திலிருந்து ஒரு பெண்போலீஸ் நடித்துக் காட்டினார்.

அதன்படி காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண் போலீஸ் அதிகாரியை சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும்போலீஸ் அதிகாரிகள் வரவேற்று முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.

பின்னர் அனைத்துப் படையினரும் அணிவகுத்து நிற்க, அந்த அணிவகுப்பு மரியாதையை அந்தப் பெண் போலீஸ்அதிகாரி ஜீப்பில் சென்றவாறு ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ஜெயலலிதா எப்படிக் கொடியேற்றுவார் என்பதையும் அந்தப் போலீஸ் அதிகாரி செய்து காண்பித்தார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்கரைச் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X