ராஜ்குமார் கடத்தல் வழக்கு: நக்கீரன் நிருபருக்கு ஜாமீன்
சத்தியமங்கலம்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள "நக்கீரன்" நிருபர் சிவசுப்பிரமணியனுக்கு ஜாமீன்அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாகசிவசுப்பிரமணியன் தாளவாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆறு மாதமாக சிவசுப்பிரமணியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் தனக்குஜாமீன் அளிக்க வேண்டும் என்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சுப்பிரமணியம் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். தினமும் அவர்காலை 10.30 மணிக்கு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்றும் நீதிபதிதீர்ப்பளித்தார்.
ஆனாலும் சிவசுப்பிரமணியத்தின் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவர் ஜாமீனில் வெளி வர முடியாதநிலையில் இன்னும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.