12வது துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஷெகாவத்: ஜெ. பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக மூத்த பா.ஜ.க. தலைவரான பைரோன் சிங் ஷெகாவத் நாளை(திங்கள்கிழமை) பதவியேற்க உள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான ஷெகாவத் கடந்த 12ம் தேதி நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரானசுசில் குமார் ஷிண்டேயை 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து துணை ஜனாதிபதியானார்.

ஷெகாவத்தின் பதவியேற்பு விழா நாளை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது.

ஜெ. பங்கேற்பு:

இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஷெகாவத் நேற்றுடெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா நாளை துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த மாதம் 25ம் தேதி இந்தியாவின் ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாம் பதவியேற்றுக் கொண்ட விழாவிற்குமத்திய அரசு தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று ஜெயலலிதா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுகுறிப்பிடத்தக்கது.

ஆனால் துணைப் பிரதமர் அத்வானி பின்னர் ஜெயலலிதாவிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தார் என்பதும்நினைவிருக்கலாம்.

கருணாநிதிக்கும் அழைப்பு:

இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதிக்கும் ஷெகாவத் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு ஷெகாவத் அழைத்தார் என்று இன்று சென்னையில் நிருபர்களிடம்கருணாநிதி தெரிவித்தார்.

ஆனால் தன் உடல் நிலை காரணமாகப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று ஷெகாவத்திடமேகூறிவிட்டதாகவும் கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+