போலி பாபா சிடி: ரஜினி புகார்
சென்னை:
பாபா படத்தின் போலி வி.சி.டிக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தைத் தயாரித்துள்ள ரஜினியின் லோட்டஸ்இன்டர்நேசனல் போலீசில் புகார் தந்துள்ளது.
இந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
காவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.
இந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை:இந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
காவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.
இந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை:
பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எதிராகவோ அந்தக் கட்சிக்கு எதிராகவோ இனி ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சத்திய நாராயணா கேட்டுக் கொண்டுள்ளார்.
"பாபா" படப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று நேற்று கடலூரில் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்று சத்திய நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாமகவுக்கு எதிராக இனி ரஜினி ரசிகர்கள் யாரும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம்.
அதே போல் டாக்டர் ராமதாஸையோ பாமக தொண்டர்களையோ தாக்கிப் பேச வேண்டாம் என்றும் அவர்களுக்குஎதிராகப் போஸ்டர்களோ துண்டுப் பிரசுரங்களோ வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சத்திய நாராயணா கூறியுள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எதிராகவோ அந்தக் கட்சிக்கு எதிராகவோ இனி ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சத்திய நாராயணா கேட்டுக் கொண்டுள்ளார்.
"பாபா" படப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று நேற்று கடலூரில் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்று சத்திய நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாமகவுக்கு எதிராக இனி ரஜினி ரசிகர்கள் யாரும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம்.
அதே போல் டாக்டர் ராமதாஸையோ பாமக தொண்டர்களையோ தாக்கிப் பேச வேண்டாம் என்றும் அவர்களுக்குஎதிராகப் போஸ்டர்களோ துண்டுப் பிரசுரங்களோ வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சத்திய நாராயணா கூறியுள்ளார்.