For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.75 லட்சம் மதிப்பு பான், குட்கா, புகையிலை பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த சோதனைகளில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள பான் பராக், குட்கா மற்றும்புகையிலை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் துறை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பான் பராக், குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றில் கட்டச்சு என்ற நச்சுப் பொருள் உள்ளது. இந்த பொருள்வாய்ப்புற்று நோய்க்குக் காரணமாக உள்ளது. எனவே பான் பொருட்களை விற்கவும், பயன்படுத்தவும் கடந்தநவம்பர் மாதம் தமிழக அரசு தடை விதித்தது.

அரசின் தடையை அடுத்து மாநிலம் முழுவதிலும் நடந்த சோதனையின் போது இதுவரை ரூ.75 லட்சம் மதிப்புள்ள17,192 கிலோ எடையுள்ள பான் பராக், குட்கா மற்றும் புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து பான் பொருட்கள், குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றின் விற்பனைநடந்து வருவதாக அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்படிச் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X