செப் 6 முதல் தடை நீக்கம்: அரசு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடை செப்டம்பர் 6ம் தேதி முதல் நீக்கப்படுகிறது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் புலிகள்மீதான 4 ஆண்டுகாலத் தடை முடிவுக்கு வருகிறது.
தடையை நீக்கினால் தான் தாய்லாந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று அறிவித்து தங்களது அறிவிப்பில் உறுதியாககவுமஇருந்தது எல்.டி.டி.ஈ. இதையடுத்து பேச்சு தொடங்கும் நேரத்தில் தடையை நீக்குவோம் என பிரதமர் ரணில் அறிவித்தார்.
ஆனால், தடை நீக்கத்துக்கு அதிபர் சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இப்போது புதிய சட்டத் திருத்தம் மூலம் அவரதுஅதிகாரத்துக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார் ரணில்.
இந் நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி புலிகள்- இலங்கை அரசு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதையொட்டிசெப்டம்பர் 6ம் தேதியே புலிகள் மீதான தடையை நீக்கிவிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே இன்று அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசிடேட் பிரஸ்சிடம்கூறுகையில், உறுதியளித்த மாதிரியே புலிகள் மீதான தடையை நீக்குகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications