போலீசாரிடம் புகார் கொடுக்க கட்டணமா?- டி.ஜி.பி. மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் வந்து புகார் கொடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது தவறானது என்று தமிழக டி.ஜி.பியானநெய்ல்வால் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நெய்ல்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிமன்றத்தில் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இது போலீஸ்நிலையங்களுக்குப் பொருந்தாது.
போலீஸ் நிலையம் வந்து பொதுமக்கள் இலவசமாகவே புகார் கொடுக்கலாம். இதற்காக அவர்கள் கட்டணம்எதையும் செலுத்த வேண்டியதில்லை.
போலீசாரிடம் புகார் கொடுக்க மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதாக ராமதாஸ்கூறியுள்ளது தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்று அவ்வறிக்கையில் நெய்ல்வால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications