விநாயகர் சதுர்த்தி: கைத்தறி ஆடை அணிய ராம. கோபாலன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
செசென்னை:
தமிகைத்தறி நெசவாளர்களின் துயர்களைத் துடைக்கும் விதமாக வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழகத்தில்உள்ள அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளரான ராமகோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராம . கோபாலன் பேசுகையில்,
நெசவாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் அவர்களின் பசியைப் போக்குவதற்காக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள் திறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே நெசவாளர்களின் துயரைப் போக்குவதற்காக அவர்கள் உற்பத்தி செய்து, கூட்டுறவு சங்கங்களிலும் ரேஷன்கடைகளிலும் தேங்கிக் கிடக்கும் கைத்தறி ஆடைகளை வாங்க பொதுமக்கள் முன் வர வேண்டும்.
இதற்காக வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அனைவரும் கைத்தறி ஆடை அணிந்து நெசவாளர்களுக்கு உதவவேண்டும் என்றார் ராம கோபாலன்.












Click it and Unblock the Notifications