நெல்லையில் பரவும் காட்டுத் தீ
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் களக்காடு காட்டுப்பகுதியில் காட்டுத் தீ பெரிய அளவில் பரவி வருகிறது. தீயை அணைக்கதீவிர முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
களக்காடு- முண்டன்துறை வனப் பகுதியில் சனிக்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இது வேகமாக பரவிவருகிறது.
முண்டன்துறை புலிகள் சரணாலய இயக்குனர் அண்ணாமலை கூறுகையில், இதுவரை புலிகள் அல்லது வேறு வனவிலங்குகள் எதுவும் பலியானதாகத் தெரியவில்லை.
இருப்பினும் தீ பெரிய அளவில் பரவி வருவதால் விலங்குகளுக்கு, குறிப்பாக புலிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்என்று அஞ்சுகிறோம்.
நூற்றுக்கணக்கானோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications