பலத்த பாதுகாப்புடன் காட்டுக்கு வந்த ராஜ்குமார்
தொட்டகாஜனூர்:
வீரப்பனால் இரு ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் நேற்று, தான் கடத்திச் செல்லப்பட்ட இடத்துக்கு மீண்டும்வந்தார். அவரது வருகையை ஒட்டி காட்டுப் பகுதியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொட்டகாஜனூர் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து தான் ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிகடத்தப்பட்டார். கிட்டத்தட்ட 106 நாட்களுக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது பண்ணை வீடு வாஸ்து சாஸ்திரப்படி இல்லை என்பதால் அதை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு புதிய வீடுகட்டியுள்ளார். இந்த வீட்டைப் பார்க்க அவர் நேற்று தனது மனைவி பர்வதம்மாவுடன் தொட்டகாஜனூர் வந்தார்.
அவரது வருகையையொட்டி தொட்டகாஜனூர் முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான போலீசார்காட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னும் பின்னும் 10 போலீஸ் ஜாப்கள், வேன்கள் வர கார் மூலம் ராஜ்குமார் இங்கு வந்தார்.
இந் நிலையில் இந்தப் பகுதியின் அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை- கொள்ளேகால் காட்டுப் பகுதியைச் சேர்ந்த காமகரே கிராமத்தில் இருந்துமுன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ளான் வீரப்பன்.












Click it and Unblock the Notifications