போராட்டம் நடத்திய மதுரை மாணவிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் ஆணையை எரித்து தமிழகம் முழுவதும்போராட்டம் நடத்தினர். மதுரையில் இந்தப் போராட்டத்தை நடத்திய மீனாட்சி கல்லூரி மாணவிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அரசுக் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குஆதரவாக, பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகஸ்ட் 29ம்தேதி நடக்கிறது.

கல்லூரி ஆசிரியர்கள் போராட்டக் குழுவின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திஉடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 29ம் தேதிமனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

அதேபோல, செப்டம்பர் 4ம் தேதி சென்னை, சேலம், வேலூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், மதுரை மற்றும்திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் ஆணையை எரித்து தமிழகம்முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள், மாநிலக் கல்லூரி மாணவர்களும்இந்தப் போராட்டத்தை நடத்தினர். மாணவர்கள் கடற்கரை சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டமும்நடத்தினர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருச்சியிலும் இதே போன்ற போராட்டம் நடந்தது.மதுரையில் அரசின் உத்தரவை எரித்த மீனாட்சி கல்லூரி மாணவிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆசிரியர்- மாணவர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் அனைத்தும் இரண்டாவதுவாரமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+