கல்வீச்சு, கடையடைப்பு: பதற்றம் பரவுகிறது
கொள்ளேகால்:
வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டத்தைக் கண்டித்து கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியில் பல இடங்களில் கன்னடர்கள் சாலை மறியலில்ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்துள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுஇயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நாகப்பா ஜெயித்து வந்த ஹென்னூர் தொகுதி மக்கள் அப் பகுதியில்வாகனப் போக்குவரத்தை முழுவதுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை தமிழக எல்லையில் உள்ள காஜனூர் காட்டுப் பகுதியில் இருந்துகடத்திச் சென்றான் வீரப்பன்.
இதனால் வீரப்பன் தமிழக எல்லைப் பகுதியில் தான் செயல்பட்டு வருகிறான் என்று கர்நாடகம் கூறி வந்தது. ஆனால், நேற்று கர்நாடகஎல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி கடத்தலையும் நிறைவேற்றியதன் மூலம் அதனைப் பொய்யாக்கிவிட்டான் வீரப்பன்.
தேவேகெளடா கண்டனம்:
நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதற்கு முன்னாள் பிரதமரும் ஜனதா தளத்தின் ஒரு பிரிவின் தலைவருமான தேவே கெளடா கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசு போதிய பாதுகாப்பு தர தவறியதால் தான் இந்தக் கடத்தல் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.