கலாமுக்கு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்குஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, தமிழக கல்லூரி ஆசிரியர்கள் கடிதம்எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தங்களது அடுத்த கட்ட முயற்சியாக, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடுஅரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில்,

ஏற்கனவே அரசுக் கல்லூரிகள் அனைத்தும், பல்கலைக்கழக பாடத் திட்டத்தையே பின்பற்றி வருகின்றன.பல்கலைக்கழகத்தில் என்ன போதிக்கப்படுகிறதோ, அதுவே அரசுக் கல்லூரிகளிலும் போதிக்கப்படுகிறது.

எனவே பல்கலைக்கழகங்களுடன் சேருவதால் கல்வித் தரம் உயரும் என்பது தவறான வாதமாகும்.

அரசுக் கல்லூரிகளை, பல்கலைக்கழகத்தில் இணைப்பதால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டார் மற்றும்பழங்குடி இன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் அதிக அளவில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாது. அவர்களது படிப்பு தடைபடும்.

அரசின் நிதிச் சுமை காரணமாக, உயர் கல்விப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு, மாணவர்களின் படிப்பு மற்றும்ஆசிரியர்களின் நலன் ஆகியவற்றில் விளையாட முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால் அதனால் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பாதிக்கப்படுவர் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+