நாகப்பாவை மீட்க உதவ தயார்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க உதவி செய்யத் தயாராக இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த விவகாரத்தில் உதவி செய்யத் தயாராக உள்ளேன். இந்த விவகாரத்தில் என்னுடைய உதவி கேட்டு கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவிடம் இருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. கேட்டால் உதவத் தயார்.
தமிழகத்தை நிர்வாக வசதிக்காகத் தான் இரண்டாகப் பிரிக்கச் சொல்கிறேன். ஜாதி அடிப்படையில் அல்ல. இந்தக் கோரிக்கைமுழுக்க முழுக்க நியாயமானது. நிர்வாக ரீதியிலானது. இந்தக் கோரிக்கையை நான் கைவிட மாட்டேன். வலியுறுத்திக் கொண்டேஇருப்பேன்.
தமிழகத்தின் வறட்சி நிலைமையை சமாளிக்க மத்திய அரசிடம் 10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்குமாறு கோரியுள்ளேன்என்றார்.












Click it and Unblock the Notifications