மனைவியின் அக்காவை பலாத்காரம் செய்த பங்க் குமார் கைது
சென்னை:
தன் மனைவியின் அக்காவை பெங்களூருக்குக் கடத்திப் போய் ஒரு மாதம் வரை வைத்து பாலியல் பலாத்காரம்செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து பிரபல சென்னை ரவுடி பங்க் குமாரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவன் பங்க் குமார். பெரிய ரவுடியாகிய அவன் அந்தப் பகுதியையேகதி கலக்கி வந்தான்.
காண்டிராக்டர் ஒருவரை கடத்திச் சென்றது தொடர்பாக சமீபத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியேவந்திருந்தான். அவன் மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகள்உள்ளன.
அரசியல் செல்வாக்குடைய பங்க் குமார் ஜாமீனில் வெளி வந்த பிறகு சமீப காலமாக யார் கண்ணிலும்தட்டுப்படவில்லை. இந்த நிலையில் பங்க் குமார் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹேமா என்ற பெண் ஒருபுகார் கொடுத்தார். பங்க் குமாருடைய மனைவியான லலிதாவின் அக்கா தான் இந்த ஹேமா.
ஹேமா தனது மனுவில், எனது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். நான் மட்டும் எனது வீட்டில்தனியாக வசித்து வருகிறேன். சமீபத்தில் என் வீட்டுக்கு வந்த பங்க் குமார் என்னை மிரட்டி பெங்களூருக்குஅழைத்துச் சென்றார். அங்கு ஒரு மாதம் வரை வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் மீதுநடவடிக்கை எடுக்கவும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பங்க் குமாரைத் தேடிப் பிடித்த போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications