For Daily Alerts
Just In
வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் நடை பயணம்
திருச்சி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியிலிருந்து வேலூருக்கு மதிமுகவினர்நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து இன்று காலை கிளம்பிய நடை பயணத்தை மதிமுக அவைத்தலைவர்எல். கணேசன் தொடங்கி வைத்தார்.
திருச்சி நகரம், புறநகரங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சென்றுகடைசியாக வேலூருக்கு இந்த நடை பயணத்தை மேற்கொள்கின்றனர்.
சுமார் 400 கி.மீ. பயணம் செய்து செப்டம்பர் 15ம் தேதி வேலூர் கோட்டையில் மதிமுகவினர் தங்கள் நடைபயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.
கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்தவர்கள்தங்களுக்குரிய சீருடைகளை அணிந்து கொண்டு இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]