ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: வாழப்பாடி
சென்னை:
வெளிநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராக வருவதை ஏற்க முடியாது என்று பேசியதமிழக முதல்வர் ஜெயலலிதா இதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் தமிழககாங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஜெயலலிதா இவ்வாறு பேசியுள்ளார். அதற்காக அவர் உடனடியாகமன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
ஜெயலலிதாவின் பேச்சால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருடைய கொடும்பாவியை எரித்தது சரிதான். அது அவர்களுடைய நியாயமான ஆத்திரம் கூட.
ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோனியாவின் உருவ பொம்மைகளை எரிக்குமாறு அதிமுகதொண்டர்களை ஜெயலலிதா தூண்டி விட்டுள்ளார். மேலும் போலீசார் உதவியுடன் காங்கிரஸ் அலுவலகங்களைத்தாக்கவும் அவர் தான் தூண்டியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனும் வீரப்பனும் வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள்இருவருக்கும் தொடர்பு உண்டு என்று ஜெயலலிதா கூறுவதும் சரியில்லை.
திமுக தலைவர் கருணாநிதிக்கும் வீரப்பனுக்கும் உள்ள தொடர்புகள் கூறித்து ஜெயலலிதா நன்றாக ஆராய்ச்சிசெய்து பி.எச்டி. டாக்டர் பட்டம் கூடப் பெற்று விட்டுப் போகட்டும். அதற்காக இவ்விஷயத்தில் ஏன் ஜாதிப்பெயரை இழுக்க வேண்டும் என்று வாழப்பாடி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications