தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்
பெங்களூர்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விட கர்நாடக அரசுஒப்புக்கொண்டுள்ளது.
நேற்றிரவு வரை நீடித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த இரு அமைச்சரவைக்கூட்டங்களிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்தார்.
தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடுவதால் விவசாயிகள், அரசியல் கட்சிகளிடம் இருந்து கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில்விவசாயிகளுக்கான கடன் வட்டியை கர்நாடகம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக முதல்வர் கிருஷ்ணா முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கெளடாவுக்கு மாண்டியா,மைசூர் மாவட்டங்களில் காவிரி பாயும் கிராமப் பகுதிகளில் செல்வாக்கு அதிகம். கெளடாவின் ஆதரவு இருந்தால் இந்தப் பகுதியில்ஏற்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்திவிட முடியும் என கிருஷ்ணா நினைக்கிறார்.
இதையடுத்து அவரை நேற்றிரவு கிருஷ்ணா நேரில் சென்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் கர்நாடகத்தின்நலனை எக் காரணம் கொண்டும் தியாகம் செய்ய மாட்டோம். கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கப்படும்.
எந்த சமயத்திலும் மக்களுக்கு விரோதமாக அரசு செயல்படாது. எனவே பொது மக்கள் அமைதி காக்க வேண்டும். உடனே காவிரிஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்ட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications