சிறையில் நெடுமாறன் உடல் நிலை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று கோர்ட்டில் வியாழக்கிழமை ஆஜர் செய்யப்படவில்லை.

திருச்செந்தூர் வழக்கு தொடர்பாக அவர் இன்று அந் நகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த சிலநாட்களாக அவரது கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு வருகிறது. தோள்பட்டையிலும் வலி உள்ளது.

இதற்கு மருத்துவர்கள் சிகிசிசை அளித்து வருகின்றனர்.

இதன் காரணமாக நெடுமாறன் இன்று திருச்செந்தூர் கொண்டு செல்லப்படவில்லை. இதுதொடர்பாக உரிய மருத்துவ சான்றிதழ்திருச்செந்தூர் கோர்ட்டில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக நெடுமாறனின் வக்கீல் தேவநாதன் தெவித்துள்ளார்.

சென்னை பொடா நீதிமன்றத்திற்கும், திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கும் மாற்றி மாற்றி வேன் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் மீண்டும்கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்படுவதால் நெடுமாறன் உடல் நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+