ஸ்டாலின் மீண்டும் மேயராவாரா?: ஒருவருக்கு ஒரு பதவி வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை:
ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்றுமாலை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தைதமிழக அரசு கொண்டு வந்தது.
இதையடுத்து ஸ்டாலினின் மேயர் பதவி பறிபோனது.
இந்த சட்டத்தை எதிர்த்து வக்கீல் உதயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்தவழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச்விசாரித்து வந்தது.
அவர்கள் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேயர் பதவிக்கு தேர்தல்நடத்தக் கூடாது, அந்தப் பதவியைக் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து கராத்தே தியாகராஜனை மேயராக்க முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது. பொறுப்பு மேயர்என்ற பெயரில் கராத்தே செய்த சேட்டைகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
இந் நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி வழக்கில் இன்று மாலை மிக முக்கிய தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்புஅரசுக்கு எதிராக இருந்தால் ஸ்டாலின் மீண்டும் மேயராக வாய்ப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications