For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைசூரில் கலவரம்: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

கன்னடர்கள் நடத்தி வரும் வன்முறைகளால் சேலம், ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் பஸ்கள்நிறுத்தப்பட்டுவிட்டன.

அதே போல தஞ்சாவூர்- மைசூர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியாக, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் தமிழகதிதற்குத் தண்ணீர் விடக்கூடாதுஎன்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால் இந்த மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அதேபோல ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்,ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருச்சியிலிருந்து மைசூர் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வன்முறை தொடர்ந்தால் இந்த ரயில் மைசூருக்குச் செல்லாமல் பெங்களூரிலேயே நிறுத்தப்பட்டுவிடும்என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்தப் போராட்டங்களால் மைசூர்- பெங்களூர் இடையிலான ரயில்கள், பஸ் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூர்-பெங்களூர் இடையிலான ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X