கன்னடர் கலாட்டா: தமிழகத்துக்கு இதுவரை 60 லட்சம் நஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ஒசூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றது, காவிரி விவகாரம் ஆகிய நிகழ்வுகளால்தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இதுவரை ரூ. 28 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

தமிழக பூ வியாபாரிகளுக்கு ரூ. 30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு செல்லும் பேருந்துப் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. ஒசூரிலிருந்து, மைசூருக்கு தினசரி 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த 14 நாட்களாக இவை இயக்கப்படவில்லை. இதனால் இங்கு மட்டும் ரூ. 20 லட்சம் அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளது. மற்ற ஊர்களிலிருந்து கர்நாடகத்தின் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நஷ்ட விவரம் தெரியவில்லை.

நாகப்பா கடத்தப்பட்டதால் தமிழக அரசுக்குச் சொந்தமான ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.மேலும் பல பஸ்கள் உடைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட சேதம் 2 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது.

தமிழக போக்குவரத்துத் துறை தவிர இந்த விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பூ வியாபாரிகளும், அதைவிளைவிக்கும் விவசாயிகளும்தான். விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை ரூ. 30 லட்சம் அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாமந்திப் பூ, ரோஜாப் பூ, கனகாம்பரம், மல்லி ஆகிய பூக்களை பெங்களூக்கு கொண்டு செல்ல முடியாமல் பூவியாபாரிகள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

மொத்தத்தில் தமிழக அரசும் கடந்த 2 வாரங்களில் சுமார் ரூ. 60 லட்சத்தை இழந்து நிற்கின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+