ஒரு வழியாக மேட்டூர் வந்தது காவிரி நீர்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கடந்த இரு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் ஒரு வழியாக மேட்டூர் வந்து சேர்ந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கடந்த 4ம் தேதி கபினி அணைையிலிருந்து 1.25 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டதாககர்நாடகம்தெரிவித்திருந்தது.

ஆனால், தண்ணீர் வரும் வழியில் உள்ள கால்வாய்களில் கர்நாடக விவசாயிகள் மணல் மூட்டைகளைப் போட்டுமூடியதாலும், கபினி அணையின் மதகுகளை அதிகாரிகள் அவ்வப்போது மூடிவிட்டதாலும் தண்ணீர் தமிழகத்துக்குவந்து சேரவில்லை.

இந் நிலையில நேற்று முன் தினம் அணையை விவசாயிகளே மூடினர். 15 மணி நேரத்துக்குப் பின் நேற்று தான்அணை மீண்டும் திறக்கப்பட்டது.

இவ்வாறு கர்நாடகத்தில் இருந்து இழுத்துக்கோ பறிச்சிகோ ஸ்டைலில் கிளம்பிய காவிரி நீர் தட்டுத் தடுமாறி.தடைகளைத் தாண்டி நேற்று ஓகனேக்கல் வந்து சேர்ந்தது.

இந்த நீர் நேற்று இரவு 8 மணி வாக்கில் மேட்டூர் அணைக்கு வந்துது. இதை தமிழக பொதுப்பணித்துறைஅதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேட்டூர் அணையில் திங்கள்கிழமை காலை 4.30 மணி நிலவரப்படி 64.25 அடி தண்ணீர் இருந்தது. அணைக்குவிநாடிக்கு 4130 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 14,941 கன அடி நீர் வெளியேறிக்கொண்டுள்ளது.

இந் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கர்நாடத்தில் இருந்து 1.25 டி.எம்.சிக்குப் பதிலாக 0.8 டி.எம்.சி. நீர் தான்தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது.

முதலில் 1.25 டி.எம்.சி நீரைத் தரச் சொல்லி உத்தரவு வந்தபோது 24 மணி கழித்து அதை செயலில் காட்டியகர்நாடக அரசு, நீரை குறைவாக விடச் சொன்ன பிரதமர் வாஜ்பாயின் உத்தரவை உடனுக்குடன் அமலாக்கிவிட்டது.

தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரை உடனே குறைக்குமாறு டெல்லியில இருந்த முத்லவர் கிருஷ்ணா நேற்று இரவே அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்துவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+