சேலத்தில் ஒரு சாட்டையடி கல்லூரி!
சேலம்: சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாணவிகளைக் கேலி செய்யும் மாணவர்களை சாட்டையால் அடிக்கும்பழக்கம் உள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் போர்க் கொடிதூக்கியுள்ளனர்.
இந்தத் தனியார் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்வகுப்பறையில் மாணவர்களின் செயல்பாடுகளை தங்களது அறையிலிருந்தவாறே, கல்லூரி நிர்வாகி மற்றும்பிரின்சிபால் ஆகியோர் கண்காணித்து வருகின்றனறர்.
மேலும் தவறு செய்யும் மாணவர்களை அறைக்கு அழைத்து சாட்டையால் அடிப்பார்களாம். இது மாணவர்கள்மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.
இதையடுத்து சமீபத்தில் மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதிவரவழைத்தது.
ஆனால் 2 மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் வரவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களை அறைக்கு அழைத்துசாட்டையால் அடித்துள்ளனர். இது மாணவர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள்தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரச்சினை இப்போது போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications