For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி4

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா):

தட்ப வெப்ப நிலையை அறிய உதவும் புதிய செயற்கைக் கோள் ஒன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நாளைவிண்ணில் பாய்கிறது.

"மெட்சாட்" என்று பெயரிடப்பட்டுள்ள 1,060 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி.-சி4ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்கல ஏவுதளத்திலிந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் ஏவப்படவுள்ளது.

இதற்கான 56-மணி நேர "கவுன்ட் டவுன்" ஏற்கனவே துவங்கி விட்டது.

1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஒரு செயற்கைக் கோளை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஒன்று சுமந்துசெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழித்துத் தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம்செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டு வந்தன.

ஆனால் இம்முறை பி.எஸ்.எல்.வி.-சி4 ராக்கெட் மூலம் "மெட்சாட்" ஏவப்படுவதன் மூலம் ஏராளமான பணம்மிச்சப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய செயற்கைக்கோள் மூலம் புயல் மற்றும் மழை போன்றவற்றை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X