அதிரடிப்படை உதவவில்லை: கருப்பு பூனைப் படை திடீர் வாபஸ்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் எந்தவிதத்திலும் தங்களுக்கு உதவி செய்யவில்லைஎன்று கூறி மத்திய அரசின் கருப்புப் பூனைப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் இன்று தங்கள் பணிகளைவாபஸ் பெற்றுக் கொண்டு டெல்லிக்குத் திரும்பிச் சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இரவு வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டதைத்தொடர்ந்து, 150 கருப்புப் பூனைப் படையினர் வீரப்பனைப் பிடிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தேவையான உதவிகளையும் ஐடியாக்களையும் கூறுவார்கள் என்றும்அதன்படி நடந்து கொண்டு வீரப்பனைப் பிடிப்பதில் கருப்புப் பூனைப் படை கமாண்டோக்கள் ஈடுபடுவார்கள்என்றும் கூறப்பட்டது.
அதன்படி தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள குண்டால் காட்டுப் பகுதியில் 150 கமாண்டோக்களும்முகாமிட்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு இன்று திடீரென்று கருப்புப் பூனைப் படை கமாண்டோக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்களைத் திரும்பவும் டெல்லிக்கு வருமாறு அழைத்தது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தங்களுக்கு எந்தவிதத்திலும் உதவிசெய்யவில்லை என்று மத்திய அரசிடம் கருப்புப் பூனைப் படை கமாண்டோக்கள் கூறிவிட்டனர்.
மேலும் வெறுமனே இப்பகுதியில் நாங்கள் சும்மா உட்கார்ந்திருப்பது சுத்த வேஸ்ட் என்று கர்நாடக அரசிடமும்கமாண்டோக்களில் தலைவரான பிரிகேடியர் ராஜ் சீதாபதி கூறிவிட்டார்.
வீரப்பன் இருக்குமிடம் பற்றிய தகவல் கிடைத்த பின்னர் நாங்கள் மீண்டும் வந்து அவனைப் பிடிப்பதற்கானமுயற்சிகளில் ஈடுபடுவோம் என்றும் ராஜ் சீதாபதி கூறினார்.
இதையடுத்தே அவர்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. கமாண்டோக்கள் 150 பேரும் இன்றேடெல்லிக்குத் திரும்புகின்றனர்.
இருந்தாலும் 20 கமாண்டோக்கள் மட்டும் தொடர்ந்து குண்டால் பகுதியிலேயே தங்கியிருப்பார்கள் என்றும்கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications