சென்னையில் வருமான வரி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை
சென்னை:
சென்னை வருமான வரித்துறை விசாரணைகள் பிரிவு இயக்குநர் திரிபாதி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர்சோதனை நிடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
திரிபாதி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அவருடைய சென்னை,புவனேஸ்வர் மற்றும் கட்டாக் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
"இக்கி சார்ட்ஸ்" என்ற நிறுவனம் முறைகேடான வகையில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளது. அதற்கு திரிபாதிஉதவியாக இருந்துள்ளது விசாரணையின்போது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு சினிமா நட்சத்திரங்களுக்கும் தவறான வகையில் திரிபாதி உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது.நேற்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை சுமார் 5 மணி வரை சோதனைநடத்தினர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள திரிபாதியின் வீட்டில் மட்டுமல்லாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடையஅலுவலகம், மயிலாப்பூரில் உள்ள அவருடைய ஆடிட்டர் ஆஷா விஜயராகவனின் வீடு, லஸ் சர்ச் ரோட்டில் உள்ளஆஷாவின் அலுவலகம் ஆகியவற்றிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திரிபாதியின் பண்ணை வீடு மற்றும் ஏஜென்ட் ராகவனின்வீடு ஆகியவற்றிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 15 இடங்களில் சோதனைநடந்துள்ளது.
இந்தச் சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications