காவிரி விவகாரம்: தமிழகத்தின் 10 மத்திய அமைச்சர்களுக்கும் மார்க்சிஸ்ட் சூடு
கோயம்புத்தூர்:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சரவையில் உள்ள 10 தமிழக அமைச்சர்களும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதது பெரும் வேதனையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்வரதராஜன் கூறியுள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 10 அமைச்சர்களும் மெளனமாக இருப்பதுவேதனையளிக்கிறது. இவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பதால் யாருக்கு என்ன பயன்?
ஒருவர் கூட காவிரிப் பிரச்சினை குறித்து அக்கறை காட்டாதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைஅளித்துள்ளது. இவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோர் வறட்சியால்வாடுவது குறித்த பிரச்சினையில் அரசு தீவிரம் காட்டாமல் மெத்தனமாக உள்ளது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக பாதிக்கப்பட்டோருக்கு உரிய வறட்சி நிவாரணம் சரியான வழியில் சென்று சேருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றார் வரதராஜன்.
-->