பெரியாரின் 124வது பிறந்த நாள் விழா
சென்னை:
தந்தை பெரியாரின் 124-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதிலும் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, இளைஞரணித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா மாலையணிவிக்க வரவில்லை. அவர் சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்பல்வேறு அமைச்சர்கள் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.சபாநாயகர் காளிமுத்துவும் இதில் கலந்து கொண்டார்.
பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாலைஅணிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், குமரி அனந்தன் ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.மதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications