For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

கபினி அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது

கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் நேற்று தான் மேட்டூரை அடையத் தொடங்கியது. தினசரி 9,000 கன அடிஎன்ற அளவிற்குத் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகம் அறிவித்திருந்தது.

அதே நேரத்தில் காவிரி டெல்டா பகுதியில் லேசான மழை பெய்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்துஅதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கபினி அணையில் கர்நாடக விவசாயி ஒருவர் போதையில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அந்தஅணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.

தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,179 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 12,072கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52.32 அடியாக உள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X