வீரப்பனுக்கு ஆயுத சப்ளை: முன்னாள் ராணுவ வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் வாங்கிக் கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அதிரடிப்படைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
பீகார் தீவிரவாதிகளிடமிருந்து சப்ளை செய்யப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை வீரப்பனுக்குக் கொடுத்ததுதொடர்பாக அறிவழகன், வீரபாண்டியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை அதிரடிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமில் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அப்போது தான் அரியலூரைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்ற முன்னாள் ராணுவ வீரர் மேற்கு வங்காளமாநிலத்திலிருந்து வீரப்பனுக்குப் பல்வேறு ஆயுதங்களை வாங்கிக் கொடுத்த விஷயம் தெரிய வந்தது.
அறிவழகன் அளித்த தகவலின் படி அரியலூர் சென்ற அதிரடிப்படை போலீசார் அங்கு பாண்டுரங்கனைக் கைதுசெய்தனர்.
-->












Click it and Unblock the Notifications