சென்னையில் பிடிபட்ட தாவூத் கூட்டாளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இம்ரான் என்பவர் சென்னை அண்ணா நகர் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் ஒருவன் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தான்.

போலீஸார் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்த போது தான் அவன் தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இம்ரான்மகந்தி என்பது தெரிய வந்தது.

மும்பை மாபியா கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இம்ரான் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் மீது மும்பையில் 5 கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் விரைவில்வந்து இம்ரானைக் கைது செய்து அழைத்துச் செல்வார்கள் என்றும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர்விஜயகுமார் நிருபர்களிடம் கூறினார்.

இம்ரான் ஏற்கனவே போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் போலீசார்உஷார்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தான் அவன் சென்னை வந்து இங்கிருந்தே துபாய் செல்ல முயற்சித்ததாகவும்கூறப்படுகிறது.

இருந்தாலும் இம்ரான் சென்னை வந்ததற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+