தமிழக அதிரடிப்படை நடவடிக்கையை நிறுத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் உடல் நலையைக் கருத்தில் கொண்டு அவர்களை மீட்க தூதர்களைஅனுப்புவதற்கு வசதியாக தமிழக அதிரடிப்படை தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றுகர்நாடக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகப்பாவின் உடல் நிலை மோமடைந்துள்ளதாகதகவல் வந்துள்ளது. எனவே அவரை மீட்க அமைதித் தூதர்களை அனுப்ப கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

அதற்கு வசதியாக கர்நாடக அதிரடிப்படை தனது நடவடிக்கைகளை நிறுத்தி விட்டது. அதேபோல, தமிழகஅதிரடிப்படையும் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு போய்க் கிடகின்றன. இந் நிலையில் தமிழகத்திற்குத்தண்ணீர் விடுவது மிகச்சிரமமாக உள்ளது.

இது தொடர்பாக கர்நாடக அணைகளை சுற்றிப் பார்த்து நேரில் ஆராய்ந்து தமிழக நிபுணர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில் நீக்குப்போக்குடன் தமிழகம் நடந்து காள்ள வேண்டும் என்றார் அவர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+