உள்ளாட்சி இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு
சென்னை:
தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதிஇடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 16ம் தேதி தொடங்கியது. நாளை (23ம் தேதி) மனுத்தாக்கல் முடிவடைகிறது.
சர்ச்சைக்குரிய கீரிப்பட்டியில் இருவரும், பாப்பாபட்டியில் இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் மற்றொரு பரபரப்பான ஊராட்சி அமைப்பான நாட்டார்மங்கலத்தில் இன்னும் ஒருவர் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
அக்டோபர் 7ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் சகோதரர்கள்
இந்நிலையில் கீரிப்பட்டியில் இரு சகோதரர்களும் பாப்பாபட்டியில் இரு சகோதரர்களும் மனு தாக்கல்செய்துள்ளனர்.
கீரிப்பட்டியில் கட்டராமன் மற்றும் மாயக்காளை ஆகிய இருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருவரும்சகோதரர்கள். அதேபோல பாப்பாப்பட்டியில் சின்னான் மற்றும் சடையாண்டி ஆகிய இரு சகோதரர்கள்மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டார் மங்கலத்தில் கடைசி நாளான நாளை இங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய கிராம மக்களே முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தனித்துப் போட்டி - இளங்கோவன்:
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும். சில வார்டுகளுக்கான தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம்
-->












Click it and Unblock the Notifications